Categories: Local News

யாழில் ஹெரோயினுடன் பெண்கள் இருவர் கைது

யாழில் நீண்ட காலமாக ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இரண்டு பெண்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி வூரி ஐந்தாம் குறுக்கு ஓட்டமாடமி பகுதி மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலக்கம் 112 யமுனாவிடி நல்லூர் ஆகிய முகவரிகளில் நேற்று (02) இரண்டு சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

02 கிராம் 490 மில்லிகிராம் ஹெரோயினுடன் அராலி தெரு ஐந்தாம் குறுக்கு ஓட்டமாடமி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணும், 01 கிராம் ஹெரோயின் மற்றும் 270 மில்லிகிராம் ஹெரோயினுடன் நல்லூர் யமுனாவீதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக இருவரும் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரண்டு பெண்களும் நீண்டகாலமாக ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

meera

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

1 month ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

5 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

6 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

7 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

7 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

7 months ago