லங்கா பிரிமியர் லீக் தொடரின் முதலாவது போட்டியில் கண்டி பெல்கன்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிப் பெற்றுள்ளது.
நேந்று ஆரம்பமானமுதல் போட்டியில் தம்புள்ளை சிக்சர்ஸ் மற்றும் கண்டி பெல்கன்ஸ் அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற கண்டி அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதன்படிஇ முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அவ்வணி சார்பில் சமிந்து விக்கிரமசிங்க 62 ஓட்டங்களையும் மற்றும் மார்க் செப்மேன் 91 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் தசுன் சானக்க 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதற்கமைய, 180 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி அணி 17.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அவ்வணி சார்பில் தினேஷ் சந்திமால் அதிகபட்சமாக 65 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய ஏஞ்சலோ மெத்திவ்ஸ் 37 ஓட்டங்களையும் மற்றும் தசுன் சானக்க 46 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…