நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் 13 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவர் நேற்று (30) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நோர்டன்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இதற்கு முன்னர் 9 வயதான சிறுமியை துஷ்பிரயோகம் செய்து அப்பகுதியை விட்டு தப்பிச்சென்று சுமார் 10 வருடங்கள் மாவனெல்ல பிரதேசத்தில் வியாபாரியாக தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டு கடுமையான பிணை நிபந்தனைகளில் விடுவிக்கப்பட்டவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேற்று (30) காலை சந்தேகநபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கையொப்பமிட பொலிஸ் நிலையத்துக்கு சென்ற பின்னர் பிணையில் கையெழுத்திட்ட சகோதரியின் வீட்டிற்குச் சென்று சகோதரியின் மகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி திக் ஓயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…
அனர்த்த முகாமைத்துவ நிறுவனக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மாத்திரம் போதாது எனவும், தீர்வுகளை அடி மட்டத்திற்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்…