T20 உலகக்கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்தியா அணி 24 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணிக்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இந்திய அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் ரோஹித் சர்மா 92 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
8 ஆறு ஓட்டங்கள் மற்றும் 7 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அவர ்இந்த ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
சூர்யகுமார் யாதவ் 31 ஓட்டங்களையும், சிவம் துபே 28 ஓட்டங்களையும் மற்றும் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய ஹர்திக் பாண்டியா 27 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் மிச்சல் ஸ்டார்க் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
அதன்படி, 206 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
அவுஸ்திரேலியா அணி சார்பில் ட்ரவிஸ் ஹெட் அதிகபட்சமாக 76 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுக்களையும் மற்றும் குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியை தொடர்ந்து புள்ளிப் பட்டியலில் மூன்று போட்டிகளிலும் வெற்றிப் பெற்று 6 புள்ளிகளுடன் இந்தியா அணி முதலிடத்திலும், அவுஸ்திரேலியா 2 புள்ளிகளுடனும், ஆப்கானிஸ்தான் 2 புள்ளிகளுடனும் மற்றும் பங்களாதேஷ் புள்ளிகள் இன்றியும் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…