நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பவே தாம் நாட்டைப் பொறுப்பேற்றதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் விவசாயிகளின் வாழ்விலும் புதிய மாற்றம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.
விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் 55 மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு – கரடியனாறு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் நிலக்கடலை பதப்படுத்தும் நிலையத்தை நேற்று (23) காலை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதிக்கு தமிழ் கலாசார முறைப்படி வரவேற்பு அளிக்கப்ப்பட்டது.
நிலக்கடலை பதப்படுத்தும் நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அதன் செயற்பாடுகளைப் பார்வையிட்டார்.
அதனையடுத்து விவசாயிலுக்கு ஜனாதிபதியால் மடிக்கணினிகளும் வழங்கப்பட்டன.
இதேவேளை, மைலம்பாவலி – செங்கலடி பிரதேசத்தில் அமைந்துள்ள மாதுளை தோட்டத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் பார்வையிட்டார்.
இந்த மாதுளை தோட்டம் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருப்பதோடு, 300 விவசாயிகள் இந்தப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் கடந்த வருடம் அரை ஏக்கர் மாதுளை விளைச்சலில் 36 இலட்சம் ரூபாய் வரையிலான வருமானத்தை ஈட்டியிருந்தனர்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…