Categories: Local News

பங்களாதேஷை வீழ்த்திய அவுஸ்திரேலியா

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சுப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி DLS method முறையில் 28 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

North Soundயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற  அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 140 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பில் அணியின் தலைவர் Najmul Hossain Shanto அதிகபட்சமாக 41 ஓட்டங்களையும், Towhid Hridoy 40 ஓட்டங்களையுடம் பெற்றனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் Pat Cummins 03 விக்கெட்டுக்களையும், Adam Zampa 02 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 11.2 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை இழந்து 100 ஓட்டங்களை பெற்ற நிலையில் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.

இதன்படி அவுஸ்திரேலிய அணி DLS method முறையில் 28 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பில் David Warner ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 53 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

இதேவேளை, ஐசிசி இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் பெட் கம்மின்ஸ் தொடர்ச்சியாக 3 விக்கெட்டுக்களை வீழ்த்தி ஹட்ரிக் சாதனை படைத்துள்ளார்.

உலகக் கிண்ணத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்காக அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹட்ரிக் சாதனை படைத்த இரண்டாவது வீரர் இவர் ஆவார்.

2007ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக பிரட் லீ, 27 ஓட்டங்களுக்கு தொடர்ச்சியாக 3 விக்கெட்டுக்களை வீழ்த்தி ஹட்ரிக் சாதனை படைத்திருந்தார்.

அதற்குப் பின்னர் பட் கம்மின்ஸ் இம்முறை 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளாரர்.


 

meera

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

2 months ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

6 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

7 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

8 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

8 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

8 months ago