பொசொன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் 322 பொசன் வலயங்கள், 296 அலங்கார தோரணங்கள் மற்றும் 4,600 அன்னதானசாலைகள் அடங்கலாக 6,000 நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் 11,100 விகாரைகளில் பல்வேறு சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் பொசொன் பண்டிகையை முன்னிட்டு 20,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள், 400 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், 700 இராணுவத்தினர், நாடு முழுவதும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
27,000 சமூக பொலிஸ் பாதுகாப்பு உறுப்பினர்கள் பொசொன் பண்டிகையை முன்னிட்டு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், இன்று ஆரம்பமாகும் ஹோமாகம தம்ம ரஷ்மி பொசொன் பிரதேசத்தை மையப்படுத்தி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…