உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று (20) காலை நாட்டை வந்தடைந்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்திற்கு முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களை மீளாய்வு செய்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இரண்டு நாட்கள் விஜயமாக நாட்டுக்கு வருகைத் தந்துள்ளார்.
இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்தித்து இவர் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, மலையகத் தமிழ் தலைவர்கள், வடக்கு- கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மூன்றாவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இந்நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…