சவுதி அரேபியாவின் மக்காவில் கடும் வெப்பம் காரணமாக ஹஜ் யாத்திரைக்கு சென்ற 14 யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் ஜோர்டான் பிரஜைகள் எனவும், மேலும் 17 பேரை காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்களை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக ஜோர்டான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஹஜ்ஜுக்கு சென்ற ஈரானிய யாத்திரிகர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்ட போதிலும், அவர்களின் மரணத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
இந்த வார வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என்று சவுதி தேசிய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் அய்மன் குலாம் கடந்த வாரம் எச்சரித்திருந்தார்.
சவூதி அரேபிய சுகாதார அமைச்சு, யாத்திரிகர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வெளியிட்டிருந்ததது.
கடந்த ஆண்டு ஹஜ் யாத்திரையில் சுமார் 240 யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…