Categories: Local News

அக்கா மறுத்ததால் தங்கையை கடத்திய 20 வயது காதலன்

14 வயதுடைய சிறுமியொருவர் கடத்திச் செல்லப்பட்டு பாதாள அறையில் அடைக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்ட சம்பவம் புத்தல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

கடந்த 9ஆம் திகதி சிறுமியின் வீட்டுக்கு வந்த மூன்று பேர் சிறுமியின் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கி சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் உறவினர்கள் பொலிஸாரிடம் அறிவித்ததையடுத்து, சிறுமியின் காதலன் எனக் கூறும் புத்தல பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், சிறுமி பற்றிய எந்தத் தகவலும் கண்டுபிடிக்க முடியாமல் போனதால், பொலிஸாரால் குறித்த இளைஞனின் நெருங்கிய நண்பர்கள் இருவரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் நடந்த அனைத்தையும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இருவரின் வாக்குமூலத்தின் பிரகாரம், புத்தலவுக்கு அருகில் உள்ள வீடொன்றின் அறையொன்றில் தயாரிக்கப்பட்ட பாதாள அறையில் பதுங்கியிருந்த சிறுமியை பொலிஸ் அதிகாரிகள் குழு கண்டுபிடித்துள்ளது.

சந்தேகநபர் சிறுமியின் மூத்த சகோதரியுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அவரை தன்னுடன் செல்ல அழைத்த போது, அவர் அதனை மறுத்ததாகவும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன்பிறகு, சந்தேக நபர் சிறுமியின் சகோதரியுடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

meera

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

1 month ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

5 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

6 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

7 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

8 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

8 months ago