இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிணக்க கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று இடம்பெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 13 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
Taroubaயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களை பெற்றது.
அந்த அணி சார்பில் Sherfane Rutherford ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் Trent Boult 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் 150 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 136 ஓட்டங்களை பெற்ற நிலையில் தோல்வியடைந்தது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Glenn Phillips அதிகபட்சமாக 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் Alzarri Joseph 04 விக்கெட்டுக்களையும், Gudakesh Motie 03 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதற்கமைய குழு c இலிருந்து சுப்பர் 8 சுற்றுக்கு முதல் அணியாக மேற்கிந்திய தீவுகள் அணி தகுதி பெற்றுள்ளது.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…