Categories: Local News

கடற்றொழில் தொடர்பான புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை

ஒலுவில் துறைமுகம் சார்ந்த வளங்கள் பாதுகாக்கப்பட்டு அதனைப் புனரமைத்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கடந்த காலத்தில் நிலவிய வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்து மக்களின் வாழ்க்கையை வழமைக்கு கொண்டு வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும், அதனால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு ஆதரவளித்து அவருடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார்.

“ஒலுவில் துறைமுகத்தை புனரமைத்து மீள இயக்குவது தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.

அந்தப் பிரதேச மக்களின் நலன்களைப் பேணும் வகையிலும் அங்குள்ள வளங்களைப் பாதுகாத்து அபிவிருத்தி செய்கின்ற வகையிலும் துறைமுகத்தை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

குறித்த துறைமுகத்தை நாட்டின் முன்னேற்றத்திற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கண்டறிவதே இந்தக் கலந்துரையாடலின் நோக்கமாகும். அப்பணிகளை நிறைவு செய்து விரைவாக எமது இலக்கை அடைய வேண்டும்.

இந்தியாவின் குறிப்பாக தமிழ் நாட்டு மீனவர்கள் அத்துமீறி எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபடுவதும், சட்டவிரோத உபகரணங்களைப் பயன்படுத்துவதும் எமது கடல் வளங்களை அழிக்கிறது. அது மட்டுமன்றி எமது மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகின்றது. எனவே இந்த, இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இடையில் நிலவும் பிரச்சினை தொடர்பிலும் ஜனாதிபதி தனது இந்திய விஜயத்தின்போது இந்திய தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளார்.

கடற்றொழிலாளர்களின் நலன்களை மேம்படுத்தும் வகையிலும் கடற்றொழில்துறை வளங்களைப் பாதுகாக்கும் வகையிலும் நாம் கடற்றொழில் தொடர்பான புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

தற்போது எரிபொருள் விலையேற்றத்தால் மீனவர்கள் மாத்திரமன்றி நுகர்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் மானியங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். இது தொடர்பில் ஜனாதிபதியிடம் கலந்துரையாடி வருகின்றோம். அதேநேரம், நன்னீர் மீன்வளர்ப்பு, நீர் முகாமைத்துவம் குறித்தும் விசேட அவதானம் செலுத்தி வருகின்றோம் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

meera

Recent Posts

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

3 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

4 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

5 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

5 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

5 months ago

அச்சுறுத்தல் காணப்படும் பிரதேசங்களில் ஏற்படும் அனர்த்தங்களை தடுப்பதற்கு புதிய தீர்வுகள் வழங்க வேண்டும் ; ஜனாதிபதி

அனர்த்த முகாமைத்துவ நிறுவனக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மாத்திரம் போதாது எனவும், தீர்வுகளை அடி மட்டத்திற்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்…

5 months ago