உலகில் சுற்றுலா செல்வதற்கு சிறந்த முதல் மூன்று நாடுகளில் இலங்கையும் உள்ளடங்கியுள்ளது.
ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டு கோடை சீசனில் பயணம் செய்ய உலகின் சிறந்த மூன்று நாடுகளாக இலங்கை, கிரீஸ் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகள் பெயரிடப்பட்டுள்ளன.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில், சுமார் 285 மில்லியன் மக்கள் சர்வதேச அளவில் பயணம் செய்துள்ளனர், இது கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகமாகும்.
அடுத்த சில மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான அமெரிக்கர்கள் சர்வதேச அளவில் பயணம் செய்ய உள்ளனர், மேலும் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் மட்டும் 24 மில்லியன் வெளிநாட்டு பாஸ்போர்ட்களை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழ் காட்டுகிறது.
இந்த கோடை காலத்தில் சுற்றுலா பயணிகள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று ஃபோர்ப்ஸ் இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை, கிரீஸ் மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளை பயணத்திற்கு ஏற்ற இடங்களாக அறிமுகப்படுத்த முடியும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபோர்ப்ஸ் சஞ்சிகை, இலங்கை பசுமையான மேட்டு நிலங்கள் மற்றும் பிரமிக்க வைக்கும் கடற்கரைகள் கொண்ட ஒரு தீவு என்றும், பாலியைப் போலவே சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாகவும் உள்ளது என்று சுட்டிக்காட்டுகிறது.
அறிக்கையின்படி, இலங்கையில் இயற்கை அழகை அனுபவிக்க 22 தேசிய பூங்காக்கள் உள்ளன.
கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அண்மைக்கால நிகழ்வுகளில் இருந்து மீண்டு, இந்த வருடத்தில் பார்வையிட சிறந்த இடங்களில் இலங்கை முன்னணியில் இருப்பதாக ஃபோர்ப்ஸ் சஞ்சிகை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…
அனர்த்த முகாமைத்துவ நிறுவனக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மாத்திரம் போதாது எனவும், தீர்வுகளை அடி மட்டத்திற்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்…