ஒரு தொகை கொக்கெய்ன் போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்னொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் பிலிப்பைன்ஸில் வசிக்கும் 47 வயதுடைய உதவி கணக்காளர் என்பது தெரியவந்துள்ளது.
விமான நிலைய சுங்கப் பிரிவினரால் இவர் கைதுசெய்யப்பட்டபோது, இவரிடமிருந்து 2 கிலோ 851 கிராம் கொக்கேய்ன் கைப்பற்றப்பட்டது.
இந்தக் கொக்கெய்ன் போதைப்பொருளின் பெறுமதி 20 கோடி ரூபாவுக்கும் அதிகமென சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தப் பெண் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து தோஹா – கட்டார் ஊடாக நாட்டுக்கு வந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தனது பயணப்பையில் மிளகாயத்தூள், மஞ்சள் தூள் மற்றும் கோதுமை மா அடங்கிய 03 பொதிகளுடன் கொக்கெய்ன் போதைப்பொருள் அடங்கிய 03 பொதிகளையும் மறைத்து வைத்திருந்தார்.
சந்தேகநபரான பெண்ணின் நண்பியின் ஊடாக போதைப்பொருள் கடத்தல்காரர்களால் குறித்த போதைப்பொருள் இலங்கைக்குள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மேலும், போதைப்பொருள் கடத்தல்காரர்களால் குறித்த பெண் 5 நாட்களுக்கு இலங்கையில் உள்ள சுற்றுலா ஹோட்டல்களில் தங்குவதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக மேலும் தகவல் வெளியாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…