மொரந்துடுவ, பொல்ஹேன பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் வெட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பண்டாரகம, வல்கம பகுதியைச் சேர்ந்த லசந்த புஷ்ப குமார என்ற 30 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபருக்கு தனது சகோதரி மற்றும் அவரது கணவருடன் நீண்டகாலமாக முன்விரோதம் இருப்பது தெரியவந்துள்ளது.
குறித்த நபர் மேலும் சில நண்பர்களுடன் மொரந்துடுவ, பொல்ஹேன பிரதேசத்தில் வசிக்கும் தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், அங்கு சகோதரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர், வாக்குவாதம் முற்றிய நிலையில், சகோதரியின் கணவர் அவரை தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான நபர் நீண்ட நேரமாக காயங்களுடன் வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் விழுந்து கிடந்த நிலையில் அம்பூலன்ஸ் மூலம் கோனடுவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல் நடத்திய நபர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை மொரந்துடுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…