Categories: Local News

12 வயது சிறுவன் மாயம் – உதவி கோரும் பொலிஸார்

மதுரங்குளி முன்மாதிரி பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனை கடந்த மூன்று நாட்களாக காணவில்லை என அம்மாணவனின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காணாமல் போனவர் மதுரங்குளி முன்மாதிரி பாடசாலையில் தரம் 7 இல் கல்வி பயிலும் நெதுசர பிரியனந்த எனும் 12 வயதுடைய மாணவன் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

அவர் மதுரங்குளி நகரை அண்மித்த நவகம்மானய பகுதியில் வசித்து வந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவனின் தாய் தொழில் நிமித்தம் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், மாணவன் பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 18 ஆம் திகதி யாருக்கும் சொல்லாமல் வீட்டில் இருந்து வெளியேறிய மாணவன் இன்னமும் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவன் காணாமல் போன போது வெள்ளை நிற சேட்டும், நீல நிற காற்சட்டையும் அணிந்திருந்தார் எனவும் கூறப்படுகிறது.

காணாமல்போன மாணவன் தொடர்பில் தகவல் ஏதும் தெரிந்தால் உடனடியாக 0322268221 எனும் பொலிஸ் நிலையத்திற்கு அல்லது 0718592927 எனும் பொறுப்பதிகாரியின் இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறு மதுரங்குளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கே.கே.காமினி விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

meera

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

1 month ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

5 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

6 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

7 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

8 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

8 months ago