Categories: Local News

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை கொலை செய்த உறவினர்

மீரிகம, கித்தலாவல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் இன்று காலை கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் 78 வயது முதியவர், 80 வயதுடைய வயோதிப பெண் மற்றும் அவர்களது விசேட தேவையுடைய 42 வயது மகன் ஆகியோரே கொல்லப்பட்டுள்ளனர்.

கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் உயிரிழந்தவர்களின் உறவினர் ஒருவரை நால்ல பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீரிகம, கித்தலாவல பிரதேசத்தில் இன்று அதிகாலை விசாரணைக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று அங்குள்ள வீதியொன்றில் துவிச்சக்கரவண்டியை தள்ளிச் சென்ற நபரொருவரை அவதானித்துள்ளனர்.

சுமார் 40 வயதான குறித்த நபர் தொடர்பில் சந்தேகம் எழுந்த நிலையில், பொலிஸார் அவரைச் சோதனையிட்டதில், அவரிடம் இருந்த பணம், தங்க நகைகள் மற்றும் 78 வயதுடைய நபரின் தேசிய அடையாள அட்டை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

அவர் வேறு ஒருவரின் அடையாள அட்டையை வைத்திருந்தார் என்ற சந்தேகம் காரணமாக அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியைக் கண்டறிய பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

பின்னர் அந்த வீட்டை சோதனையிட்டபோது, ​​3 பேரின் உடல்கள் காணப்பட்டுள்ளன.

சந்தேகநபரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட தேசிய அடையாள அட்டை வீட்டின் உரிமையாளரான 78 வயதுடைய நபருடையது எனவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதன்படி, சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​குறித்த குடும்பத்தின் நெருங்கிய உறவினரான இவரே மூன்று கொலைகளையும் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடிப்பதற்காக தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோரின் கழுத்தை நெரித்து கொன்றதாக அவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நால்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Mohamed Arshad

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

1 month ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

5 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

6 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

7 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

8 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

8 months ago