கினிகத்தேன பிரதேசத்தில் சாதாரணத் தரப் பரீட்சைக்காக பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரு மாணவிகள் காணாமல் போயிருந்த நிலையில் உறவினர் ஒருவரின் வீட்டில் வைத்து நேற்று (15) இரவு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாகக் கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவிகள் இருவரும் கடந்த 14 ஆம் திகதியன்று சாதாரணத் தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காகக் கினிகத்தேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றின் பரீட்சை நிலையத்திற்கு சென்றுள்ள நிலையில் இருவரும் பரீட்சைக்குத் தோற்றாமல் காணாமல் போயிருந்துள்ளனர்.
இதனையடுத்து இரு மாணவிகளின் உறவினர்களும் இது தொடர்பில் கினிகத்தேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், மாணவிகள் இருவரும் வேலை வாய்ப்புத் தேடி கொழும்பு பிரதேசத்திற்கு சென்றுள்ள நிலையில் இருவரும் கடுவலை பிரதேசத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…