சிறுமியை வன்புணர்ந்து கலென்பிந்துனுவெவ நகரில் பதுங்கியிருந்த நபரை கொக்காவெவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொக்காவெவ, தெய்தெல்லேவ பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
17 வயதுடைய சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்த போது, சந்தேக நபர் வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சிறுமி தனது பெற்றோருக்குத் தெரிவித்ததையடுத்து, அவர்கள் கொக்காவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் பிரகாரம் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சந்தேகநபரை கைது செய்து நேற்று (13) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சந்தேக நபரை நாளை (15) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கஹட்டகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கவெவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…