Categories: Local News

ஏ9 வீதியில் கோர விபத்து – இருவர் பலி

கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் மடத்துகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

28 மற்றும் 31 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மடதுகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அனுராதபுரத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்றும்இ தம்புள்ளையில் இருந்து கெக்கிராவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

கண்டி நோக்கி பயணித்த பேருந்து, அதே திசையில் பயணித்த சிறிய லொறியை முந்திச் செல்ல முற்பட்ட போது முன்னால் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் பலத்த காயமடைந்தனர். அதன்போது பேருந்தும் லொறியுடன் மோதி வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வயல்வெளியில் உருண்டு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

விபத்தின் போது பேருந்தில் சுமார் 40 பயணிகள் இருந்ததாகவும், விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளதுடன், விபத்தில் படுகாயமடைந்த இரு இளைஞர்களும் தம்புள்ளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.

கைது செய்யப்பட்ட பேருந்து சாரதி நேற்று (12) கெக்கிராவ பதில் நீதவான் கித்சிறி அம்பகஹவத்தவிடம் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

meera

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

2 months ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

7 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

7 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

9 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

9 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

9 months ago