வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியின் ஹந்தபனகல சோமியல் சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வீதியில் சென்ற பாதசாரி ஒருவரின் மீது வாகனம் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதுடன், குறித்த வாகனம் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் பின்னர், பல வாகனங்கள் வீதியில் கிடந்த இறந்த சடலத்தின் மேல் பயணித்துள்ளதாகவும், அதனால் சடலம் அடையாளம் காண முடியாத வகையில் சிதைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அலுகல்கே பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்துக்குள்ளான வாகனம் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
எனினும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…