எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியின் போது கரீபியன் தீவுகளுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ISIS குழு ஒன்றின் ஊடாக உலகக் கிண்ணப் போட்டிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படலாம் என தகவல்கள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருபதுக்கு20 உலகக் கோப்பை போட்டிகள் ஆன்டிகுவா, பர்புடா, பார்படாஸ், கயானா, செயின்ட் லூசியா, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடின்ஸ் மற்றும் டிரினிடேட் அன்ட் டொபேகோ ஆகிய நகரங்கள் நடைபெறவுள்ளன.
அதுமட்டுமின்றி அமெரிக்காவின் புளோரிடா, நியூயோர்க், டெக்சஸ் ஆகிய நகரங்களிலும் போட்டிகள் நடைபெறுகின்றன.
எனினும:, அமெரிக்காவில் நடைபெறும் போட்டிகளுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட ஏதேனும் அபாயங்களை நிவர்த்தி செய்ய ஒரு ‘விரிவான மற்றும் வலுவான பாதுகாப்பு திட்டம்’ நடைமுறையில் உள்ளது என்பதை அனைவரும் உறுதியாக நம்பலாம் என சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாகி ஜானி கிரேவ்ஸ் தெரிவித்தார்.
இதேவேளை, உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக கரீபியன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டிகள், மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் ஜூன் முதலாம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெற உள்ளன.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…