இந்த வாரம் பஹாமாஸில் நடைபெறவுள்ள உலக அஞ்சல் ஓட்டப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை ஆடவர் அணிக்கான விசா மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றில் பங்கேற்க பஹமாஸ் நோக்கி புறப்படவிருந்த இலங்கை ஆடவர் அணி இந்த சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சாதனை படைத்த அருண தர்ஷன மற்றும் காலிங்க குமார உட்பட 4 பேர் கொண்ட அணி 4×400 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் பங்கேற்கவிருந்தது.
எவ்வாறாயினும், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா வழங்குவதற்கான நேர்காணல்களுக்கான திகதிகளை மே மாத இறுதி வரை கொடுக்காததால், பஹாமாஸில் நடைபெறும் உலக தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
விசா பிரச்சினைகள் காரணமாக பஹாமாஸுக்கு செல்ல முடியாது என இலங்கையின் தடகள மற்றும் கள நிர்வாகக் குழு நேற்று இலங்கை ஆடவர் அணியின் உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது.
போட்டிக்கான அழைப்பிதழ் கிடைத்த உடன், விசா கோரி விண்ணப்பித்த போதிலும், அமெரிக்க தூதரகம் மே மாத இறுதியிலேயே நேர்காணலுக்கான நியமனங்களை வழங்கியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் விளையாட்டு அமைச்சர் தலையிட்டாலும், தூதரகம் தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை என இலங்கையின் தடகள மற்றும் கள நிர்வாகக் குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…