நாவலப்பிட்டி, மொன்டகிரிஸ்டோ பகுதியில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின் பின்னர் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிரிக்கெட் போட்டியின் பின்னர் ஏற்பட்ட வாக்குவாதத்தில் 14 வயது சிறுவன், 13 வயது சிறுவனை கிரிக்கெட் மட்டையால் தலையில் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நாவலப்பிட்டி கதிரேசன் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் ஸ்டன்லி ஸ்டெபிக் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இரண்டு மாணவர்களும் கடந்த 23ம் திகதி மற்றொரு குழுவினருடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.ஆனால் திடீரென பெய்த மழையால் அவர்கள் விளையாடுவதை நிறுத்தியுள்ளனர்.
இதன் போது வேறொரு மாணவன் ஸ்டென்லி என்ற சிறுவனின் கிரிக்கெட் மட்டையை தண்ணீரில் மூழ்கடித்துள்ளதுடன், அவர் மேற்படி மாணவனை திட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த மற்றைய மாணவன் தனது கிரிக்கெட் மட்டையால் ஸ்டென்லி என்ற சிறுவனின் தலையில் அடித்துள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சை பெற்று வந்த நிலையில், குறித்த சிறுவன் நேற்று (30) உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனையில் தலையில் பலத்த காயம் காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
நாவலப்பிட்டி பொலிஸார் சந்தேகத்திற்குரிய சிறுவனை பொலிஸ் காவலில் எடுத்து மே மாதம் 06 ஆம் திகதி வரை வெரவல்வத்தை சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…