Categories: Sports News

உலக வரலாற்றை மாற்றி எழுதிய பஞ்சாப் கிங்ஸ்

ஐபிஎல் போட்டித் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக் கொண்டன.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 261 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் பிலிப் சால்ட் 75 ஓட்டங்களையும் சுனிர் நரேன் 71 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

அதனடிப்படையில் 262 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 18.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றிபெற்றது.

துடுப்பாட்டத்தில் ஜானி பேர்ஸ்டா ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்களையும் ஷஷாங்க் சிங் ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களையும் மற்றும் பிரப்சிம்ரன் சிங் 54 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இதனூடாக ரி20 கிரிக்கெட் வரலாற்றில் சேஸிங் செய்யப்பட்ட அதிகபட்ச ஓட்டங்களாக இது பதிவாகியுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தென் ஆபிரிக்க அணி சேஸிங் செய்த 259 ஓட்டங்கள் உலக சாதனையாக இருந்ததுடன் அந்த சாதனையை நேற்றைய தினம் பஞ்சாப் அணி முறியடித்துள்ளது.

அத்துடன் இந்த போட்டியில் இரு அணிகளும் இணைந்து மொத்தமாக 42 சிக்ஸர்களை பதிவு செய்துள்ளதுடன் ஒரு ரி20 போட்டியில் இரு அணிகளும் இணைந்து பதிவு செய்த அதிகபட்ச சிக்ஸர்களாகவும் இது பதிவாகியுள்ளது.

மேலும் இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 23 சிக்ஸர்கள் அடித்துள்ளதுடன் இதுவே ஒரு அணி அடித்த அதிகபட்ச சிக்ஸர்களாகவும் பதிவாகியுள்ளது.

Mohamed Arshad

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

1 month ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

5 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

6 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

7 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

8 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

8 months ago