சட்டவிரோதமான முறையில் உதிரிபாகங்களை கொண்டு உருவாக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களை, போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்த மூன்று இடங்களை பாணந்துறை வலன ஊழல் தடுப்பு பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர்.
நேற்று (25) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான 48 சிசி மற்றும் 41 மொவாட் மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குருணாகல், வாரியபொல, மஸ்பொத்த ஆகிய பிரதேசங்களில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் சைக்கிள்கள் குருணாகல் பிரதேசத்தில் வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்யும் வர்த்தகர் ஒருவரினால் மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, பொருத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிறுவனங்களில் வாங்கும் மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய முடியாது என வாடிக்கையாளர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல மற்றும் குருநாகல் பொலிஸ் நிலையங்கள் மேற்கொண்டு வருகின்றன.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…