இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் நேரடி விமான சேவையை ‘மோல்டிவியன்ஸ் எயார்லைன்ஸ்’ ஆரம்பித்துள்ளது.
இதன்படி, மாலைதீவின் மாலே சர்வதேச விமான நிலையத்திற்கும் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையிலான முதலாவது விமானம் நேற்று (25) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இந்த விமானம் நேற்று இரவு 09.55 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் இந்த விமானத்தை வரவேற்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த விமான சேவையின் விமானம் ஒவ்வொரு வாரமும் வியாழன் மற்றும் சனி ஆகிய இரண்டு நாட்களில் கட்டுநாயக்க மற்றும் மாலைதீவுகளுக்கு இடையில் இயங்கும்.
குறைந்த கட்டண விமான நிறுவனமான இந்த விமான நிறுவனம், தனது முதல் முதல் விமானத்திற்கு ஏ.320 ஏர்பஸ் வகை விமானத்தை பயன்படுத்தியுள்ளது.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…