இந்தோனேசிய எரிமலையின் விளிம்பில் இருந்து செல்ஃபி எடுக்க முயன்ற பெண்ணொருவர் பள்ளத்தில் விழுந்து உயிரிந்துள்ளார்.
சீனாவை சேர்ந்த ஹுவாங் லிஹாங்(31) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் பிரபலமான எரிமலை சுற்றுலா பூங்கா உள்ளது.
அங்கு தனது கணவருடன் சுற்றுலா சென்ற அவர், ‘ப்ளூ ஃபயர்’ என்று அழைக்கப்படும் எரிமலை சீற்ற நிகழ்வை படம் பிடிப்பதற்காக ஒரு குன்றின் உயரமான இடத்திற்கு சென்றுள்ளார்.
அங்கிருந்து எரிமலை பின்னணியில் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்த போது அவர் திடீரென தவறி பள்ளத்தில் விழுந்துள்ளார்.
அவரை பல முறை எச்சரித்தும் அதனை பொருட்படுத்தாது அவ்விடத்தில் புகைப்படங்களை எடுத்துக் கொண்டதாக அவர்களின் சுற்றுலா வழிகாட்டி தெரிவித்தார்.
இந்நிலையில், இரண்டு மணித்தியால தேடலின் பின்னர் அவரின் சடலம் மீட்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…