மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேசத்தில் நேற்றிரவு (18) இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வந்தாறுமூலைப் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய நடராசா சிவசுப்ரமணியம் என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
இரவு நேர உணவை உட்கொண்ட பின்னர் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்துறங்கியவேளை மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் பயணித்த கடுகதி ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவரது தலையில் பலத்த காயம் காணப்படுவதுடன். திடீர் மரண விசாரணையதிகாரி சம்பவ இடத்திற்குச்சென்று பார்வையிட்டு முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.
அதையடுத்து சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.
ஏறாவூர் பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…