போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பைப் பேணிய குற்றச்சாட்டில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படிஇ மாவத்தகமை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் தொரட்டியாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவமே இவ்வாறு கைதாகியுள்ளனர்.
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைதான 56 வயதுடைய பொலிஸ் உப பரிசோதகர் குருணாகல் பகுதியில் போதைப்பொருள் விநியோக செயற்பாடுகளில் ஈடுபடும் டுபாய் சம்பத் என்பவருடன் வட்ஸ்எப் ஊடாக உரையாடியுள்ளமை தெரியவந்துள்ளது.
அத்துடன் 38 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஒருவருடன் தொடர்பை பேணியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கைதான இருவரையும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…