கள்ளக் காதலியின் வீட்டுக்குச் செல்வதாகக் கூறி சென்றவர் அருகில் உள்ள வீட்டின் முற்றத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் சடலம் நேற்று (17) காலை கண்டெடுக்கப்பட்டதாக அத்தனகல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
பிரிவென வீதி, போபெத்த, ஊராபொல பிரதேசத்தை சேர்ந்த திருமணமாகாத நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேற்படி நபரும், சடலம் மீட்கப்பட்ட வீட்டில் வசிப்பவரும் கடந்த 16ஆம் திகதி இரவு மது அருந்திக் கொண்டிருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும், அன்றிரவு அவர் தனது கள்ளக்காதலியின் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றதாகவும், பின்னர் தாம் கதவுகளை மூடிக்கொண்டு உறங்கச் சென்றதாகவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
காலையில் எழுந்து பார்த்த போது, கள்ளக்காதலியின் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிய நண்பன், தனது வீட்டு முற்றத்தில் உயிரிழந்து இருப்பதைக் கண்டு பொலிஸாரிடம் அறிவித்துள்ளார்.
மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்தனகல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…