நேற்று (17) நடந்த தென்னாபிரிக்க மகளிர் அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 301 ஓட்டங்களை எடுத்தது.
தென்னாப்பிரிக்க அணி சார்பில் லோரா வோல்வர்ட் ஆட்டமிழக்காமல் 184 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 44.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 305 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.
ஒருநாள் போட்டி ஒன்றில் பெண்கள் கிரிக்கட் அணி கடந்து சென்ற அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும்.
அதனடிப்படையில் இதற்கு முன்னர் நியுஸிலாந்து மகளிர் அணிக்கு எதிராக அவுஸ்திரேலியா மகளிர் 6 விக்கெட்களை இழந்து 289 ஓட்டங்கள் பெற்றிருந்த சாதனையை இலங்கை மகளிர் அணி முறியடித்துள்ளது.
இலங்கை அணி சார்பில் சமரி அத்தபத்து ஆட்டமிழக்காமல் 5 சிக்ஸர்கள் மற்றும் 26 பவுண்டரிகள் அடங்களாக 195 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
இதன்படி, ஒருநாள் போட்டியில் ஒரு பெண் வீராங்கனை பெற்ற மூன்றாவது அதிகபட்ச ஓட்டம் இதுவாகும்.
இதேவேளை போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் சமரி அத்தபத்து பெற்றார்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…