நாட்டில் தடைசெய்யப்பட்ட 1000 CC மோட்டார் சைக்கிளின் பாகங்களை ஏற்றிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் முல்லேரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர் எனவும் பூகொட பொலிஸ் நிலையத்தில் விசேட கடமைகளுக்காக நியமிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முல்லேரியாவில் நேற்று (9) விசேட கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகத்திற்கிடமான காரை சோதனையிட்ட போது மேற்படி மோட்டார் சைக்கிளின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தின் போது காரில் சந்தேகநபர்கள் மூவர் பயணித்துள்ளதுடன் சந்தேக நபர்களில் ஒருவர் மேற்கண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…