Categories: Local News

அஸ்வெசும கொடுப்பனவு 18 ஆம் திகதிக்குள் வைப்பிலிடப்படும்

மேன்முறையீடுகள் மற்றும் எதிர்ப்புகளை பரிசீலித்ததை தொடர்ந்து அஸ்வெசும நிவாரணத் தொகையை பெற மேலும் 182,140 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அவர்களுக்கான நிலுவைத் தொகை உள்ளிட்ட சகல கொடுப்பனவுகளும் 18ஆம் திகதிக்குள் கணக்கு விபரங்களில் சேர்க்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

அதன்படி, தற்போது 1,854,000 குடும்பங்கள் அஸ்வெசும நிவாரணத் தொகையை பெற்று வருவதாகவும், அந்தக் குடும்பங்களுக்காக அரசாங்கம் 58.5 பில்லியன் ரூபாவைச் செலவிடுவதாகவும் சேமசிங்க குறிப்பிட்டார்.

நன்மைகளைப் பெறுவதற்கான சகல தகுதிகளையும் பூர்த்தி செய்த சுமார் 200,000 குடும்பங்கள் தங்களது வங்கிக் கணக்குகளைத் திறந்து, அது தொடர்பான தகவல்களைப் புதுப்பிக்கத் தவறிவிட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் பிரதேச செயலகங்களினூடாகவும் ஊடகங்களினூடாகவும் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதிலும், அந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களிடம் இருந்து இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை எனவும் சேமசிங்க தெரிவித்தார்.

இரண்டாம் கட்ட நிவாரணத்திற்காக 400,000 இற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இதுவரையில் சுமார் 286,000 குடும்பங்கள் இந்த அமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இது தொடர்பான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி மே மாதம் ஆரம்பிக்க உள்ளது.

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் 24 இலட்சம் குடும்பங்களை உள்வாங்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், இந்த வருட வரவு செலவு திட்டத்தில் இதற்காக 205 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

meera

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

2 months ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

7 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

7 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

9 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

9 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

9 months ago