மேன்முறையீடுகள் மற்றும் எதிர்ப்புகளை பரிசீலித்ததை தொடர்ந்து அஸ்வெசும நிவாரணத் தொகையை பெற மேலும் 182,140 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அவர்களுக்கான நிலுவைத் தொகை உள்ளிட்ட சகல கொடுப்பனவுகளும் 18ஆம் திகதிக்குள் கணக்கு விபரங்களில் சேர்க்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
அதன்படி, தற்போது 1,854,000 குடும்பங்கள் அஸ்வெசும நிவாரணத் தொகையை பெற்று வருவதாகவும், அந்தக் குடும்பங்களுக்காக அரசாங்கம் 58.5 பில்லியன் ரூபாவைச் செலவிடுவதாகவும் சேமசிங்க குறிப்பிட்டார்.
நன்மைகளைப் பெறுவதற்கான சகல தகுதிகளையும் பூர்த்தி செய்த சுமார் 200,000 குடும்பங்கள் தங்களது வங்கிக் கணக்குகளைத் திறந்து, அது தொடர்பான தகவல்களைப் புதுப்பிக்கத் தவறிவிட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் பிரதேச செயலகங்களினூடாகவும் ஊடகங்களினூடாகவும் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதிலும், அந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களிடம் இருந்து இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை எனவும் சேமசிங்க தெரிவித்தார்.
இரண்டாம் கட்ட நிவாரணத்திற்காக 400,000 இற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இதுவரையில் சுமார் 286,000 குடும்பங்கள் இந்த அமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இது தொடர்பான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி மே மாதம் ஆரம்பிக்க உள்ளது.
அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் 24 இலட்சம் குடும்பங்களை உள்வாங்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், இந்த வருட வரவு செலவு திட்டத்தில் இதற்காக 205 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…