மகப்பேற்றுக்காக வரும் கர்ப்பிணிகளுடன் அவர்களது கணவன்மாரும் மகப்பேற்று அறைக்குள் பிரவேசிக்க அனுமதியளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள மகப்பேற்று மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மகப்பேற்று அறைக்குள் கர்ப்பிணிப் பெண்களின் கணவன்மாரை அனுமதிக்கும் இலங்கையின் முதலாவது அரசாங்க மருத்துவமனையாக காசல் மருத்துவமனை (Castle Hospital) அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய நடைமுறையினால் கர்ப்பிணிப் பெண்கள் தமது குழந்தைகளை நல்ல மனநிலையுடன் பிரசவிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இப் புதிய திட்டத்தினூடாக பிரசவ வேதனையானது தனது கணவனுடன் பகிரப்படுவதோடு, தாய்-தந்தை-குழந்தை உறவு படி நிலை மேலும் உறுதியாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பிரசவ அறைக்குள் கணவன்மாரை அனுதிக்கும் நடைமுறை ஏற்கனவே உள்ள நிலையில், அரசாங்க மருத்துவமனைகளிலும் முதன் முறையாக அனுமதிக்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…