ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவரான ‘ஒலு மரா’ நேற்று (07) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொஸ்வத்த பிரதேசத்தில் மேலும் மூவருடன் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர்களிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மீகஹவொல – கொஸ்வத்த வீதியில் இடம்பெற்ற அவசர பொலிஸ் சோதனைச் சாவடியின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒலு மராவுடன் கைது செய்யப்பட்ட ஏனைய மூவரும் 31, 30 மற்றும் 28 வயதுடைய கிரிமெட்டியான, சாந்த ஆனா புர மற்றும் கொஸ்வத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் 12 ஆம் திகதி, கிரிமெட்டியான வத்த பகுதியைச் சேர்ந்த ‘ஒலு மரா’ என்பவர் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த போது மாரவில பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர், பூஸ்ஸ சிறைச்சாலை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் அண்மையில் பிணையில் விடுதலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…