Categories: Local News

சார்ஜாவில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலம் நாட்டை வந்தடைந்தது

ஐக்கிய அரபு இராச்சியத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இலங்கைப் பணியாளரான ஜயமினி சந்தமாலி விஜேசிங்கவின் சடலம் இன்று (03) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், சார்ஜா நகரில் நிலத்தடி மின் வயரிங் அமைப்பு மூலம் மின்சாரம் கசிந்து, மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை, மத்துகம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஜயமினி சந்தமாலி விஜேசிங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் தனது சகோதரர் மூலம் சார்ஜாவில் உள்ள ஒரு தகவல் தொடர்பு நிறுவனத்தில் வரவேற்பாளராக 11 மாதங்கள் பணிபுரிந்துள்ளார்.

கடந்த மார்ச் 09 ஆம் திகதி இரவு 09.30 மணியளவில் அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து அதன் எதிரே உள்ள கடைக்கு சென்றுள்ளார்.

இதன்போது அவர் இந்த துரதிஷ்டவசமான சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

இதே போன்று இரண்டு எகிப்தியர்கள், பங்களாதேஷ் பிரஜை மற்றும் பிலிப்பைன்ஸ் பிரஜை ஒருவரும் அந்த இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் இந்த பெண் குறித்து தகவல் அளித்ததையடுத்து, பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு சென்று, அந்த பகுதியில் போக்குவரத்தை நிறுத்தி, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அவரின் சடலம் டுபாயில் இருந்து இன்று (03) அதிகாலை 04.55 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன், ஜெயமினியின் தாயார், சகோதரி மற்றும் சகோதரன் ஆகியோர் அதனைப் பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்திருந்தனர்.

meera

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

2 months ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

7 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

7 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

9 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

9 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

9 months ago