Categories: Sports News

தொடரை கைப்பற்றியது இலங்கை அணி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதனடிப்படையில் துடுப்பாட்டத்தில் ஈடுப்பட்ட இலங்கை அணி முதல் இன்னிங்ஸ் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 531 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதன்போது துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் குசல் மென்டிஸ் 93 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 86 ஓட்டங்களையும், அணித்தலைவர் தனஞ்சய த சில்வா 70 ஓட்டங்களையும் மற்றும் ஆட்டமிழக்காமல் கமிந்து மென்டிஸ் ஆகியோர் தலா 92 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்களையும் இழந்து 178 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் அசித பெர்ணான்டோ 4 விக்கெட்களையும், விஷ்வ பெர்ணான்டோ, பிரபாத் ஜயசூரிய மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் பெற்றுக் கொண்டனர்.

அதனடிப்படையில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கை அணி 353 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 7 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்களை பெற்று கொண்ட நிலையில் போட்டியை இடைநிறுத்தியது.

இதன்போது துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் அஞ்சலோ மெத்தியூஸ் 56 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

அதனப்படையில் 511 என்ற வெற்றியிலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்களையும் இழந்து 318 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் லஹிரு குமார 4 விக்கெட்களையும், கமிந்து மென்டிஸ் 3 விக்கெட்களையும் மற்றும் பிரபாத் ஜயசூரிய 2 விக்கெட்களையும் பெற்றுக் கொண்டனர்.

அதனடிப்படையில் 192 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2 – 0 என்ற ரீதியில் தனதாக்கி கொண்டது.

meera

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

1 month ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

5 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

6 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

7 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

8 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

8 months ago