தேஷ்பந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்த ஜனாதிபதியின் தீர்மானத்தை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று (02) உயர் நீதிமன்றில் பரிசீலிக்கப்படவுள்ளன.
இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் பரிசீலிக்கப்படவுள்ளது.
பேராயர் ரஞ்சித் மெல்கம் ஆண்டகை, பேராசிரியர் சாவித்திரி குணசேகர, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்டோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
சபாநாயகர், பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன், சட்டமா அதிபர் உள்ளிட்ட அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் குறித்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மா அதிபராக நியமிக்க ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட தேஷ்பந்து தென்னகோனின் நியமனத்திற்கு அரசியலமைப்பு சபை உத்தியோகபூர்வமாக ஒப்புதல் அளிக்கவில்லை என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அவ்வாறான நிலையில், அவரை அந்தப் பதவிக்கு நியமிக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானம் முற்றிலும் சட்டத்துக்கு முரணானது என மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, உரிய நியமனத்தை செல்லாது என உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுக்களில் கோரப்பட்டுள்ளது.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…