பஞ்சாபில் பிறந்தநாள் கேக் சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்த பெரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபின் பாட்டியாலாவில் ஒன்லைனில் பிறந்தநாள் கேக் ஓர்டர் செய்து சாப்பிட்டதால் 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மான்வி என்ற அந்த சிறுமி மார்ச் 24 அன்று தனது குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடினர்.
அப்போது, ஒன்லைன் உணவு விநியோக தளம் மூலம் வரவழைக்கப்பட்ட கேக்கை குடும்பத்தினர் வெட்டி உண்டனர்.
இந்நிலையில், அன்றிரவு கேக் சாப்பிட்ட மான்வி மற்றும் குடும்பத்தினர் சிலர் உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மறுநாள் காலை மான்வியின் நிலை மோசமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.
கேக் தயாரித்த ‘கேக் கண்ஹா'(Cake Kanha) என்ற பேக்கரியில் கேக்கில் தீமைக்கான பொருட்கள் இருந்திருக்கலாம் என்று குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர்.
எனவே பேக்கரி உரிமையாளர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும், கேக்கை விநியோகித்த பேக்கரி குறித்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…