Categories: Local News

பொலிஸாரின் ​​துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் ஒருவர் காயம்

திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது பொலிஸாரின் ​​துப்பாக்கி இயங்கியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

28 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திஸ்ஸமஹாராம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, அப்பகுதியில் உள்ள சூதாட்ட நிலையம் ஒன்றை சோதனையிட மூவர் அடங்கிய பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளது.

பொலிஸார் அங்கு சென்றதும் சூதாட்ட​ நிலையத்தில் இருந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் அவர்களை கைது செய்ய முயன்ற போது ​​பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபருக்கும் இடையில் முறுகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது துப்பாக்கிச் இயங்கியதில் காயமடைந்த 28 வயதுடைய இளைஞர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் திஸ்ஸமஹாராம பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Mohamed Arshad

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

2 months ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

7 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

7 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

9 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

9 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

9 months ago