நீர்கொழும்பு பகுதியிலுள்ள மசாஜ் நிலையங்களில் இருந்து எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான இரு பெண்கள் அடையாளம் காணப்பட்டனர்.
குறித்த பெண்கள் பணியாற்றிய மசாஜ் நிலையங்கள் தொடர்பில் தகவல் கேட்டு பொலிஸாருக்கு பல தொலைபேசி அழைப்புகள் வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவர்களின் சேவைகளைப் பெற்ற வாடிக்கையாளர்களை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்ப பொலிஸ் மற்றும் சுகாதாரத் துறையினர் கூட்டு விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அதன்படி, குறித்த மசாஜ் நிலையங்களில் சேவைகளைப் பெற வந்தவர்களை அடையாளம் காணும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
நீர்கொழும்பில் உள்ள மசாஜ் நிலையமொன்று தொடர்ந்து செல்லும் நபர் ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மசாஜ் நிலையங்களை தேடி சோதனை நடத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்பிறகு விசாரணையை தொடங்கிய பொலிஸார், மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் 53 விபச்சார விடுதிகளில் பணியாற்றிய 137 பெண்களை கைது செய்தனர்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…