இலங்கை கடற்பரப்பில் இருவேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 36 இந்திய மீனவர்களில் 33 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த 15 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களினதும் 17ஆம் திகதி கைது செய்யப்பட்ட 21 பேரினதும் வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் இன்று(27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது 33 மீனவர்கள் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாதங்கள் சிறைத்தண்டனை என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, படகோட்டிகளான இருவருக்கு 6 மாத சிறைத்தண்டனையும் ஒருவர் இரண்டாவது தடவையாக இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்தமையால் அவருக்கு 1 வருட சிறைத்தண்டனையும் விதித்து ஊர்காவற்றுறை நீதவான் ஜெ.கஜநிதிபாலன் உத்தரவிட்டார்.
மூன்றாவது படகின் உரிமையாளர் படகில் இருந்தமையால் அந்த படகினை அரசுடைமையாக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக 8 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மூவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமையை அடுத்து, 11 இந்திய மீனவர்கள் இலங்கையில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…