Categories: Local News

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சகோதரர்கள் இருவர் கைது

நுவரெலியாவில் இருவேறு பகுதிகளில் நுணுக்கமான முறையில் கஞ்சா விற்பனை செய்த சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா பிரிவுக்குட்பட்ட நுவரெலியா கட்டுமானை மற்றும் களுகெலே ஆகிய பகுதிகளில் மூடப்பட்டிருந்த வாடகை விடுதிகளில் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து விற்பனை செய்த சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா பொலிஸ் குற்றப்பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நேற்று (26) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த கஞ்சா கையிருப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் பதுளையை சேர்ந்த 25 மற்றும் 32 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விடுதிக்கு அருகில் உள்ளவர்களுக்கு சந்தேகம் ஏற்படாதவாறு வாரத்தில் இரண்டு, அல்லது மூன்று நாட்களுக்கு மாத்திரம் மலிவு விலையில் அறைகளை வாடகைக்கு வழங்குவதாகவும் ஏனைய நாட்களில் பிரதானமாக கஞ்சாவை விற்பனை செய்து வந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருட்களுடன் அவர்களை நேற்று (26) நுவரெலியா நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் குறித்த சகோதரர்களுக்கு கஞ்சா போதைப்பொருள் கிடைக்கும் வழிகள் மற்றும் இவர்களது விநியோக வலையமைப்பு குறித்து நுவரெலியா பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

meera

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

2 months ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

7 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

7 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

9 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

9 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

9 months ago