சென்னையில் நேற்று நடைபெற்ற 16வது எடிசன் விருது விழாவில் ஐயோ சாமி பாடலுக்கு, இந்த ஆண்டின் சிறந்த உணர்வுப் பாடல் – 2023 விருது கிடைத்துள்ளது.
குறித்த விருதுடன் பாடகியான வின்டி குணதிலக்க நேற்றிரவு (26) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
சர்வதேச திரைப்படங்கள் மற்றும் பாடல்களை மதிப்பிடுவதற்காக இந்த விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது.
இந்த விருது வழங்கும் விழா கடந்த 24 ஆம் திகதி சென்னையில் நடைபெற்றது.
இவ்விருது நிகழ்வில் இப்பாடலை எழுதிய அஸ்மின் மற்றும் இப்பாடலுக்கு இசையமைத்த சனுக விக்கிரமசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இவர்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-218 இல் சென்னையில் இருந்து நேற்று இரவு 06.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
மேலும், விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக வின்டி குணதிலக்கவின் பெற்றோர்களான ரூகாந்த குணதிலக்க, சந்திரலேகா பெரேரா மற்றும் சனுக விக்ரமசிங்கவின் தந்தை சங்கீத் விக்ரமசிங்க உட்பட பலர் சென்றிருந்தனர்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…