இலங்கை கால்பந்து அணி 3 வருடங்களின் பின்னர் சர்வதேச கால்பந்தாட்ட வெற்றியை நேற்றைய தினம் பதிவு செய்தது.
11 ஆண்டுகளுக்குப் பின்னர் பூட்டானை 2-0 கோல்களில் இலங்கை அணி தோற்கடித்தது.
கடந்த 2021 ஆம் ஆண்டு பங்களாதேஷை 2-1 என்ற கோல்களால் தோற்கடித்த இலங்கை, சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் ஒத்துழைப்புடன் கொழும்பு ரேஸ்கோர்ஸில் நடைபெற்ற சர்வதேச கால்பந்து போட்டியில் நேற்று இந்த வெற்றியை பதிவு செய்தது.
பூட்டான் கடைசியாக 2015ஆம் ஆண்டு கொழும்பு சுகததாச மைதானத்தில் இலங்கைக்கு எதிராக விளையாடி 1-0 என்ற கோல் கணக்கில் இலங்கையை வீழ்த்தியது.
2013ம் ஆண்டு இலங்கை அணி 5-2 என்ற கோல் கணக்கில் பூட்டானை வீழ்த்தியது.
இந்நிலையில், 11 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று பூட்டானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
நேற்றைய ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.
45வது நிமிடத்தில் இங்கிலாந்தில் இருந்து வந்த டிலோன் டி சில்வாவும், 54வது நிமிடத்தில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை இரட்டை குடியுரிமை பெற்ற ஆலிவர் ஜேம்ஸ் கெல்லட்டும் கோல் அடித்தனர்.
இந்த போட்டியை காண சுமார் 7,000 பேர் வருகை தந்திருந்தனர்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…