ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பிற்காக பொலிஸாரால் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை ஆகிய தினங்களில் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
27, 28 ஆகிய நாட்களில் குறித்த பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தேவாலயங்களுக்கு சென்று அங்குள்ள சமயத்தலைவர்களை சந்தித்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
அத்துடன், அந்த தேவாலயங்களில் உள்ள நிர்வாகத்தினருடன் கலந்தாலோசித்து அங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் காணப்பட்டால் அவர்களுடனும் கலந்தாலோசித்து இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…