Categories: International News

தொழுகையை முடித்து வீடு திரும்பிய சிறுவன் கடத்தி கொலை

மகாராஷ்டிரா – தானே பகுதியில் 9 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிறன்று மசூதியில் மாலை தொழுகையை முடித்துவிட்டு, வீடு திரும்பிய குறித்த சிறுவனை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் பணம் பெறும் நோக்கில் கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தானேவின் பத்லாபூரில் உள்ள கோரேகான் கிராமத்தை சேர்ந்த 9 வயதான இபாத் என்ற சிறுவனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

பிரதான சந்தேகநபரான சல்மான் மௌலவி என்பவர், புதிய வீடு கட்டுவதற்காக 23 இலட்சம் ரூபா பணம் பறிக்கும் நோக்கில் குறித்த சிறுவனை கடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவ தினத்தன்று தாமதமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர், அவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது சிறுவனின் தந்தைக்கு கிடைத்த தொலைப்பேசி அழைப்பில் பணம் கொடுத்தால் மகனை உயிருடன் விடுவதாக சந்தேக நபர் அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மேலதிக விபரங்கள் ஏதுமின்றி அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டதாக சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

சிறுவன் காணாமல் போனதை அறிந்த பிரதேசவாசிகள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், பொலிஸாரும் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், திங்கள் கிழமையன்று மதியம் சந்தேக நபரான சல்மான் வசிக்கும் இடத்தை கண்டுபிடித்த பொலிஸார் அங்கு சோதனையிட்ட போது, வீட்டிற்கு பின்னால் சாக்குப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் சல்மானும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

meera

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

2 months ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

7 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

7 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

9 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

9 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

9 months ago