Categories: Local News

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை: பணம் பறிபோகும் ஆபத்து

நாட்டின் அதிக வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில், அதிகளவான மக்கள் துரிதமாக பணம் சம்பாதிப்பதற்காக தவறான வழிகளை பயன்படுத்துவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தனிநபர்கள் தொடர்ந்து மோசடிகள் மற்றும் இணைய மோசடிகளுக்கு இரையாகும் அபாயம் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசரகாலத் தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது.

தற்போது Meta, Messenger என அழைக்கப்படும் Facebook போன்ற சமூக ஊடக தளங்களில், பிரமிட் திட்டங்களுக்கு மக்கள் பணத்தை வைப்பிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் மூத்த தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களாக நட்பு கோரிக்கைகளை அனுப்பும் மோசடி செய்பவர்கள் சில போட்டிகளுக்கு வாக்களிக்குமாறு தனிநபர்களை கேட்டு மோசடி செய்வதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நண்பர் கோரிக்கையை ஏற்கனவே அவர்களின் Facebook நண்பர் பட்டியலில் உள்ள ஒருவரின் தொடர்புள்ளவர் மூலம் அனுப்பப்படலாம்.

போட்டிக்கு வாக்களிக்க ஒரு குறியீடாக நான்கு இலக்க எண்ணை அந்த நபருக்கு திருப்பி அனுப்புமாறு கோரிக்கை விடுக்கலாம்.

நான்கு இலக்க குறியீட்டு எண் ஒரு முறை கடவுச்சொல் (OTP) ஆகும். இது கடவுச்சொற்களை மாற்றுவது போன்ற செயல்களுக்காக பேஸ்புக் நிறுவனத்தால் அனுப்பப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

ஒரு முறை கடவுச்சொல்லை அனுப்பிய பிறகு, அசல் பேஸ்புக் உரிமையாளர் தனது கணக்கை இழப்பார் என தெரியவந்துள்ளது.

எனவே, OTP குறியீடுகளை யாருடனும் பகிர வேண்டாம் என இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் மூத்த தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் மூத்த தகவல் பாதுகாப்புப் பொறியாளர் கேட்டுக் கொண்டார்.

ஒரு தனிநபரின் தேசிய அடையாள அட்டை, இலங்கை கடவுச்சீட்டின் தகவல் பக்கம் மற்றும் ஓட்டுநர் உரிமங்களின் பிரதிகள், கையொப்பங்கள் உள்ளிட்டவற்றின் தெளிவான நகல்களை யாரிடமும் பகிர வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

Muhamed Hasil

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

2 months ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

6 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

7 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

8 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

9 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

9 months ago