கடுமையான வெப்பத்தால் ஒருவர் உயிரிழந்த செய்தி அக்குரெஸ்ஸ பகுதியில் பதிவாகியுள்ளது.
விஜேசிங்க தெத்துவகே தர்மசேன என்ற 72 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் பல வருடங்களாக இதய நோய்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும், ஆனால் அவர் உயிரிழக்கும் அளவுக்கு உடல்நிலை மோசமாக இருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
நிகழ்வொன்றில் பங்கேற்று தனது மனைவியுடன் வீடு திரும்பும் போது அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறிது தூரம் சென்ற பின்னர் மோட்டார் சைக்கிள் பஞ்சர் ஆகியுள்ளதுடன், அவர் தனது மனைவியை பேருந்தில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதன் பின்னர், கடும் வெப்பமான காலநிலையையும் பொருட்படுத்தாமல் குறித்த நபர் மோட்டார் சைக்கிளை ஒரு கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் பாதயாத்திரையாகத் தள்ளிச் சென்ற விதம் அருகிலிருந்த புகைப் பரிசோதனை நிலையத்தின் பாதுகாப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், அவர் சாலையில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனையில் அவர் இதய செல்கள் செயலிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…